Tuesday, June 9, 2020 - 4:22pm
க.பொ.த. உயர் தரப் பரீட்சை செப்டெம்பர் 07ஆம் திகதி முதல் ஒக்டோபர் 02ஆம் திகதி இடம்பெறும் என கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரும தெரிவித்தார்.
வழமையாக ஓகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் உயர் தரப் பரீட்சை இடம்பெறுவது வழக்கமாகும்.
இதேவேளை ஓகஸ்ட் மாதம் இடம்பெறும் புலமைப்பரிசில் பரீட்சையும் செப்டெம்பர் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
இன்று (09) பிற்பகல் கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
Add new comment