நாட்டின் சில பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ள ‘மஞ்சள் புள்ளிகளை கொண்ட வெட்டுக்கிளிகள்’ தொடர்பில் 1920 எனும் உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு, விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக, குறித்த வெட்டுக்கிளிகள் பற்றிய விபரங்களை வழங்குவதன் மூலம், அந்தந்த பிரதேசத்திலுள்ள விவசாய அதிகாரிகளின் மூலம், விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என, விவசாயத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் டப்ளியூ.எம். வீரகோன் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக குருணாகல் மாவட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக, மாவத்தகம பிரதேசத்திலும், கம்பஹா மாவட்டத்தில் மீரிகம பிரதேசத்திலும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும், கேகாலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் வெட்டுக்கிளிகளின் ஊடுருவல் அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment