Friday, May 29, 2020 - 7:12pm
- நள்ளிரவு முதல் அமுல்
நாளை (30) சனிக்கிழமை, நுவரெலியா மாவட்டத்தில் முழு நாளும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதற்கமைய இன்று நள்ளிரவு (30) 12.00 மணி முதல் நுவரெலியா மாவட்டத்தில் இரு நாட்களுக்கு ஊரடங்கு அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்று (28) அறிவிக்கப்பட்டதற்கு அமைய, நாளை மறுதினம், மே 31, ஞாயிறு மற்றும் ஜுன் 04, 05 ஆகிய தினங்களில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முழு நாளும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment