வீதி விபத்தில் ஆசிரியர் பலி

யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் எஸ். சிவானந்தன், வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த யாழ். மாநகர சபை உறுப்பினரான எஸ். தனுஜனின் தந்தையாவார்.

யாழ். மருதனார்மடம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்திலையே அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன்)


Add new comment

Or log in with...