Wednesday, May 27, 2020 - 5:26pm
மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளாத்திகுளம் வலையன்கட்டு பகுதியில் கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,
இன்று (27) காலை காட்டுப்பகுதிக்கு சென்ற இருவர் மீது கரடி தாக்கியுள்ளது. இந்நிலையில் அவர்கள் கரடியிடமிருந்து ஒருவாறு தப்பித்து வந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மற்றைய நபர் சிறு காயங்களுக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
(வவுனியா நிருபர்)
Add new comment