20 கடற்படையினர் குணமடைவு; இதுவரை 313 பேர் குணமடைவு

கொவிட் -19 தொற்றினால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 20 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (24) வெளியேறியுள்ளனர்.

இக்கடற்படையினரில் 12 பேர் கடற்படை  வைத்தியசாலையிலும், 04 பேர் ஹோமாகம வைத்தியசாலையிலும், 02 பேர் முல்லேரியா வைத்தியசாலையிலும், மேலும் 02 பேர் IDH வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

இவ்வைத்தியசாலைகளில் அவர்களுக்கு அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளுக்கு அமைய, அவர்களது உடலில் குறித்த வைரஸ் தொற்று இல்லை உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளாகி,   குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 313ஆக உயர்வடைந்துள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்கள் குணமடைந்து  வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.


Add new comment

Or log in with...