குணமடைந்த கடற்படையினர் 293ஆக உயர்வு

கொவிட் -19 தொற்றுக்குள்ளாகி, வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 10 கடற்படையினர் பூரண குணமடைந்த நிலையில், வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (23) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இக்கடற்படையினரில் 07 பேர் கடற்படை பொது வைத்தியசாலையிலும், இருவர் முல்லேரியா வைத்தியசாலையிலும், மற்றுமொருவர் IDH வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். 

வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அவர்களுக்கு அவ்வப்போது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளுக்கு அமைய குறித்த வைரஸ் தொற்று அவர்களது உடலில் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி  கொவிட்  -19 தொற்றினால் குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 293ஆக உயர்வடைந்துள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு  அமைய, அவர்களை மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 


Add new comment

Or log in with...