குணமடைந்த கடற்படையினர் எண்ணிக்கை 209

கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 05 கடற்படையினர், பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (18) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, கொவிட் -19 இனால் குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 209ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்களில் 03 பேர் IDH வைத்தியசாலையிலும், 02  பேர் ஹோமாகம வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றிருந்தனர். இதற்கமைய, அவர்களுக்கு வைத்தியசாலைகளில், அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளின் மூலம், குறித்த வைரஸ் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதால், வைத்தியசாலைகளிலிருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு குணமடைந்த 05 கடற்படையினர் உட்பட, கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 209 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...