நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

அவிசாவளையிலுள்ள சீதாவக்கை  ஆற்றில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று  (10)  இடம்பெற்றுள்ளது.

எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 22, 28 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் சீதவாக்கபுரவிலுள்ள தொழிற்சாலையொன்றில் கடமையாற்றுபவர்கள் என்பதோடு, வெரபிட்டிவ பிரதேசத்தில் இவர்கள் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளதாகவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


Add new comment

Or log in with...