நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டோருக்கு விசேட கொடுப்பனவு

நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டோருக்கு விசேட கொடுப்பனவு-Telephone-Fuel-etc-Special Alloawance-for-Village Committee Members-Those-Distributed-Rs5000

கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், ரூ. 5,000 கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு விசேட கொடுப்பனவொன்றை வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இன்று (06) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நிலவுகின்ற கடினமான சூழ்நிலையிலும் இந்நிவாரணப் பணிகளில் தொடர்ச்சியாக முன்னெப்பதில் பங்களிப்பு வழங்கிய கிராமியக் குழுக்களின் உறுப்பினர்களாக உள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இக்கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அவர்களால் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள், தொலைபேசி உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய செலவுகளுக்காக இவ்விசேட கொடுப்பனவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...