Wednesday, April 22, 2020 - 2:21pm
கொரோனா வைரஸின் அச்சுறுத்தலை நாடு எதிர்த்துப் போராடிவரும் நிலையில் அரசியல் பற்றி விவாதிப்பற்கு இது சரியான தருணம் அல்ல என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்று சமூகத்தில் வேகமாக பரவுவதை தடுக்கும் நே ஊரடக்கிலே ஊரங்கு உத்தரவு நீடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரை அடையாளம் காணப்பட்ட அதிக ஆபத்தான பகுதிகளைப் பாதுகாப்பதற்காகவும் இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Add new comment