மன்னாரில் 120 கி.கி. கஞ்சாவுடன் மூவர் கைது

மன்னாரில் சுமார் 120 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் படகொன்றை  கடற்படையினர் கைப்பற்றியுள்ளதோடு, இக்கடத்தல் சம்பவம் தொடர்பில் மூவரைக் கைது செய்துள்ளனர். 

கடல் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதனை கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினர் வழமையான ரோந்து நடவடிக்கையில் நேற்று (15) ஈடுபட்டிருந்தபோது, மன்னாரிற்கு தெற்கு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில்  டிங்கிப் படகொன்று மிக வேகமாகப் பயணிப்பதை அவதானித்து வழிமறித்துள்ளனர். எனினும்,  கடற்படையினரின் உத்தரவை மீறி பயணித்த குறித்த படகிலிருந்து பொதிகள் கடலுக்குள் வீசப்பட்டன. 

இந்நிலையில்  குறித்த படகு பொதிகளுடன் கடற்படையினரால்  கைப்பற்றப்பட்டு சோதனையிடப்பட்டது. இதன்போது 05 பொதிகளில் அடைக்கப்பட்ட 120 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் கற்பிட்டியை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களுடன் கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சா, படகு ஆகியன மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
 


Add new comment

Or log in with...