ஊரடங்கை மீறி கைதானோர் 16,892ஆக அதிகரிப்பு

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 16,892 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 4,313 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இன்று (07) மாலை 6.00 மணி வரையான காலப்பகுதியினுள்ளேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கமைய, இன்று நண்பகல் 12.00 மணி முதல் இன்று மாலை 6.00 மணி வரையான கடந்த 06 மணித்தியால காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 768 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 249 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 


Add new comment

Or log in with...