நாட்டின் சில பகுதிகளில் நாளையதினம் (08) வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய வடமேல், வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள், சுகாதாரத் துறையினர் விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமைய போதுமானளவு குடிநீரை பருக வேண்டும் என்பதோடு, களைப்படையும் நடவடிக்கைகளிலிருந்து தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
Add new comment