Monday, April 6, 2020 - 10:34am
ஜப்பானின் சில பகுதிகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்த அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே எதிர்பார்த்துள்ளார்.
அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. எனினும், இந்நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே, இன்று (06) அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானில் சுமார் 3,600 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, இந்நோய்த் தொற்றுக் காரணமாக 85 உயிரிழப்புகளும் சம்பவித்துள்ளன.
Add new comment