கொழும்பின் சில பகுதிகளில் 8 மணி நேர நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 8 மணி நேர நீர் வெட்டு-8 Hr Water Cut From 2pm-Colombo 09-14-Low Pressure-Colombo 15

நாளை (07) பிற்பகல் 2.00 மணி முதல் கொழும்பின் சில பகுதிகளில் 8 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு பணி காரணமாக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, (கொழும்பு 09, 14) தெமட்டகொடை, கிராண்ட்பாஸ், நவகம்புரவில் நாளை பி.ப. 2 மணி முதல் இரவு 10.00 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப் பகுதியில் (கொழும்பு 15) மோதறை, மட்டக்குளி  பிரதேசத்தில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என சபை தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...