ஊரடங்கை மீறி கைதானோர் 14,000 ஐ எட்டியது

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 14,268 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 3,563 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இன்று (05) மாலை 6.00 மணி வரையான காலப்பகுதியினுள்ளேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 20ஆம் திகதி முதல் நாட்டில் பொலிஸ் ஊரடங்குச்  சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, இன்று நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையான 06 மணித்தியால காலப்பகுதியினுள் 552 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இக்காலப்பகுதியில் 140  வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.   


Add new comment

Or log in with...