24 மணி நேரத்தில் ஊரடங்கை மீறிய 1,093 பேர் கைது

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் நேற்று (31) காலை 6.00 மணி முதல் இன்று (01) காலை வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் 1,093 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு இக்காலப்பகுதியில் 310 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 20ஆம் திகதி முதல் நாட்டில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00  மணி முதல் இன்று காலை 6.00 மணி வரையான காலப்பகுதியினுள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 8,451 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 2,078 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...