கொரோனாவினால் இத்தாலியில் ஒரேநாளில் 475 பேர் பலி

கொரோனா வைரஸினால் இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸினால் ஒரே நாளில் பலியான அதிகூடிய எண்ணிக்கையாகும்.

இதனையடுத்து அங்கு பலியானோரின்  எண்ணிக்கை 2,978ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் உருவாகி 150 இற்கும்  மேற்பட்ட நாடுகளில்பரவியுள்ள கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் அச்சப்பட வைத்துள்ளது.

சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள  நாடுகளில் இத்தாலி முக்கியமானது.

இத்தாலியில் 35,713 பேர் இவ்வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக கணக்கிடப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...