ஆஸி. வீரர்களுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணைகள்

ஆப்​கா​னிஸ்​தா​னில் பணி​யாற்​றும்​போது தங்​கள் நாட்டு அதி​ர​டிப் படை வீரர்க​ளால் நடத்​தப்​பட்​ட​தா​கக் கூறப்​ப​டும் 55 போர்க் குற்ற சம்​ப​வங்​கள் குறித்து புலன் விசா​ரணை நடை​பெற்று வரு​வ​தாக, அவுஸ்திரேலிய இராணுவ நட​வ​டிக்கை​கள் கண்​கா​ணிப்பு அமைப்பு தெரிவித்​துள்ளது. இது​கு​றித்து அந்த அமைப்பு செவ்​வாய்க்​கி​ழமை வெளி​யிட்​டுள்ள ஆண்​ட​றிக்கை​யில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ள​தா​வது:

ஆப்​கா​னிஸ்​தா​னில் பணி​யாற்​றி​யபோது சிறப்பு அதி​ர​டிப் படை​யி​னர் போர்க் குற்​றங்​க​ளில் ஈடு​பட்​ட​தாக புகார்கள் தெரி​விக்​கப்​பட்​டன.

அவற்​றில், 55 சம்​ப​வங்​கள் தொடர்பாக புலன் விசா​ரணை நடைபெற்று வரு​கி​றது. அந்​தச் சம்​ப​வங்​க​ளில் பெரும்​பா​லா​னவை, சண்டை​யில் ஈடு​ப​டாத அல்​லது சண்டையைக் கைவிட்​ட​வர்களை அவுஸ்​திரே​லிய வீரர்கள் கொலை செய்​த​தா​கக் கூறப்​ப​டு​ப​வது தொடர்பா​னவையாகும்.


Add new comment

Or log in with...