அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ள பெற்றோல் குண்டுத் தாக்குதலில் புகையிரத உதவி பாதுகாப்பு அத்தியட்சகர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அநுராதபுரம் பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகில் அகுருமடுவ வீதியில் அமைந்துள்ள வடக்கு மற்றும் கிழக்கு புகையிரத பாதுகாப்பு தலைமையகத்தின் உதவி பாதுகாப்பு அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ அறைக்கே இவ்வாறு பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
தனது உத்தியோகபூர்வ அறையில் புகையிரத உதவி பாதுகாப்பு அத்தியட்சகர் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த வேளையில் திறந்திருந்த ஜன்னலின் ஊடாக இனந்தெரியாத நபரால் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (27) அதிகாலையில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் எரிகாயமடைந்த குறித்த புகையிரத உதவி பாதுகாப்பு அத்தியட்சகர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Add new comment