உதயங்க வீரதுங்கவுக்கு மீண்டும் விளக்கமறியல்

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு, எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் இவ்விளக்கமறியல் உத்தரவை வழங்கியுள்ளார்.

இதன்போது அவர் சார்பில் விடுக்கப்பட்ட பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பெப்ரவரி 14ஆம் திகதிஅதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மிக் (MiG) விமான கொள்வனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதோடு, அவருக்கு பிடியாணை உத்தரவும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...