கட்டுநாயக்க, சீதுவை பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு

ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவை நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (20) காலை 8.00 மணியிலிருந்து 18 மணித்தியால நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

களனி கங்கையின் தெற்கு கரையிலுள்ள நீர் திட்டத்தின் குழாய் புனரமைப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஜா-எல, ஏக்கல, கந்தானை, ஆனியகந்த, பட்டகம, துடெல்ல, நிவந்தம, மாஎலிய, கெரவலபிட்டிய, மாட்டாகொட, வெலிசறை, மாபோல, எல்பிட்டிய, திக்ஓவிட்ட, உஸ்வெட்டிகெய்யாவ, பமுணுகம மற்றும் போபிட்டிய ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.


Add new comment

Or log in with...