கபடி போட்டியில் அஷ்ரப் கழகம் வெற்றி

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான 2020ம் ஆண்டுக்கான பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டியின் கபடி சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை அஷ்ரப் விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் தலைமையில் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச்சுற்றுப்போட்டியில் 6 விளையாட்டுக் கழக அணிகள் பங்குபற்றியது.

இதில் இறுதிப்போட்டியில் மார்க்ஸ்மென் அணியும், அஷ்ரப் அணியும் மோதியது. இதில் 39−19 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அஸ்ரப் அணி வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.

சம்பியனாகத் தெரிவான அஷ்ரப் அணி தங்கப்பதக்கத்தினையும்.இரண்டாமிடம் பெற்ற மார்க்ஸ்மென் அணி வெள்ளிப்பதக்கத்தினையும் பெற்றுள்ளது.

வெற்றி பெற்ற அஷ்ரப் விளையாட்டுக்கழக அணி மாவட்ட விளையாட்டுப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 2019ம் ஆண்டுக்கான பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டியிலும் அஷ்ரப் விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டு தங்கப்பதக்கத்தினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அட்டாளைச்சேனை விசேட நிருபர்


Add new comment

Or log in with...