பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 26ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் அவரை இன்று (12) முன்னிலைப்படுத்தியபோதே இவ்விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுத்தமை மற்றும் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்தமை தொடர்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முன்வைத்த பிணை மனுக் கோரிக்கையை நீதவான் நிராகரித்தார்.
நீதிபதிகளின் கடமைகளில் தலையிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த ஜனவரி 14ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
Add new comment