Wednesday, February 12, 2020 - 2:55pm
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் நீதவான் கிஹான் பிலப்பிட்டியவுக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் 12 தொலைபேசி உரையாடல்களின் பிரதிகளை சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றையதினம் (12) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடு செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Add new comment