Tuesday, January 28, 2020 - 11:27am
கொழும்பு உள்ளிட்ட சில இடங்களில் இன்றையதினமும் (28) நாளையதினமும் (29) வளிமண்டலத்தில் தூசி துகள்களின் அளவு அதிகரித்துக் காணப்படுமென தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது.
மேலும் நேற்றையதினம் (27) வளிமண்டலத்தில் தூசி துகள்களின் அளவு சிறிது அதிகரித்துக் காணப்பட்டதாக குறித்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியலாளர் சரத் பிரேமசிறி தெரிவித்தார்.
ஆசிய நாடுகளில் காற்று அதிகளவில் மாசடைகின்றமையே, இவ்வாறு வளிமண்டலத்தில் தூசி துகளின் அளவு அதிகரித்துக் காணப்படுவதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
Add new comment