பிணை விதி மீறல்; ஐ.தே.க. புத்தளம் எம்.பி.க்கு வி.மறியல்

பிணை விதி மீறல்; ஐ.தே.க. புத்தளம் எம்.பி.க்கு வி.மறியல்-Shantha Abeysekara, MP Puttalam-Remanded

பிணை நிபந்தனைகளை மீறியதாக ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகரவுக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 17ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைப்பதற்கு, சிலாபம் மேல்நீதிமன்ற நீதிபதி எச். பெனாண்டோ இன்று (10) உத்தரவிட்டார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு அவரது வீட்டிலிருந்து சட்டவிரோத துப்பாக்கியொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினருக்கு, ஞாயிறு தோறும் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு தெரிவித்து பிணை நிபந்தனை வழங்கப்பட்டிருந்த போதிலும் அவர், இரு முறை அதனை மீறியதாக நீதிமன்றத்திற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்திற்கொண்ட நீதவான், சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினருக்கு விளக்கமறியல் விதித்து உத்தரவிட்டார்.


Add new comment

Or log in with...