Friday, January 17, 2020 - 11:53am
தலவாக்கலை கிரேட் வெஸ்டன் மலை உச்சிக்கு ஆய்வுக்காகச்சென்ற ருஹுணுபல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் குளவி கொட்டுக்கு இலக்கானதை தொடர்ந்துலிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (16) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரில் 03 பேர் சிகிச்சை பெற்றுக்கொண்டு திரும்பியுள்ளதோடு, ஏனைய 06 பேர் தொடர்ந்தும் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
(தலவாக்கலை குறூப் நிருபர்– பி. திருக்கேதீஸ்)
Add new comment