Thursday, January 9, 2020 - 5:46pm
மாவனல்லை நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள புத்தர் சிலைகளை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 29 சந்தேகநபர்களுக்கும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (09) மவானல்லை பதில் நீதவான் ரூபிகா சமரசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.
மேலும், சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்களை பொலிசார் இன்று (09) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment