Thursday, April 25, 2024
Home » மறைந்த ரொனி டி மெலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

மறைந்த ரொனி டி மெலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

by Rizwan Segu Mohideen
February 29, 2024 4:02 pm 0 comment

சிறந்த அரசியல்வாதியும் தலைசிறந்த பொருளாதார நிபுணருமான மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அவரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கொள்ளுப்பிட்டி சார்ள்ஸ் டிரைவில் அமைந்துள்ள இல்லத்திற்கு நேற்று (28) பிற்பகல் சென்ற ஜனாதிபதி, அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு குடும்ப உறுப்பினர்களுக்கு தனது அனுதாபங்களையும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, குடும்ப உறுப்பினர்களுடன் சிறிது நேரம் உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு வைக்கப்பட்டிருந்த அனுதாபக் குறிப்பேட்டில் ஒரு குறிப்பொன்றையும் பதிந்தார்.

இலங்கையின் நீண்ட நாள் நிதியமைச்சரான ரொனி டி மெல் காலமானார்

மறைந்த காமினி ஜயவிக்ரம பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT