Home » சர்வதேச ஸ்ரீமத் பகவத்கீதை – 2024 மகோற்சவம் நாளை ஆரம்பம்

சர்வதேச ஸ்ரீமத் பகவத்கீதை – 2024 மகோற்சவம் நாளை ஆரம்பம்

- தாமரைத் தடாக மண்டபத்தில் நிகழ்வுகள்

by Rizwan Segu Mohideen
February 29, 2024 4:57 pm 0 comment

சர்வதேச ஸ்ரீமத் பகவத்கீதை மகோற்சவம்_ 2024 இம்முறை இலங்கையில் நடத்தப்படுகின்றது. நாளை முதலாம் திகதி முதல் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இம்மகோற்சவம் கொழும்பு_07 தாமரைத் தாடக மண்டபத்தில் நடத்தப்படவுள்ளது.

இந்தியாவின் ஹரியானா மாநில குருப்பிரிவு அபிவிருத்தி சபையால் வருடாந்தம் பகவத்கீதை மகோற்சவம் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இவ்வருடம் பகவத்கீதை மகோற்சவம் இலங்கையில் நடைபெறுகின்றது.

புத்தசாசன சமய கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் கலாசார அமைச்சு, இந்து கலாசார திணைக்களம், இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஆகியன இணைந்து சர்வதேச கீதை மகோற்சவத்தை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவையொட்டி ரங்கோலி கோலம் போடும் போட்டி, ஓவியம் வரையும் போட்டி, ஆன்மீக உடைப்போட்டி என்பனவும் கலாசார நிகழ்ச்சிகள், மகாபாரத கதாபாத்திரங்களைச் சித்திரிக்கும் கலை நிகழ்ச்சிகள், புத்தகக் கண்காட்சி, கைவினைப் பொருட்களுக்கான கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா என்பன இடம்பெறவுள்ளன.

நாளை வெள்ளிக்கிழமை இந்நிகழ்வுகள் ஆரம்பிக்கின்றன. நாளை மாலை 6 மணிக்கு சிறப்பு ஹோமமும் இரவு 8 மணிக்கு மாபெரும் இசைநிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.

02 ஆம் திகதி சனிக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை சர்வமதத் தலைவர்கள் உள்ளடங்கலாக ஆய்வாளர்கள் மற்றும் புலமையாளர்கள் கலந்து கொள்ளும் மகாபாரத கருத்தரங்குகள் மும்மொழிகளில் மொழிபெயர்ப்பு வசதியுடன் நடைபெறும். மாலை 5 மணிக்கு அரச உயர்மட்ட அதிகாரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகர், ஆலய அறங்காவலர்கள் உள்ளடங்கலான முக்கிய பிரமுகர்களின் பங்களிப்புடன் பிரதான வைபவம் இடம்பெறவுள்ளது.

அன்றிரவு ஏழு மணிக்கு வெள்ளவத்தை சைவ மங்கையர் கழக மாணவிகள் வழங்கும் சிறப்புக் கலை ஆற்றுகை நிகழ்ச்சியும் ஏனைய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. அன்று இசை நிகழ்ச்சியுடன் இரண்டாம் நாள் நிகழ்வு நிறைவடையும்.

03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் கைவினை கண்காட்சி, புத்தகக் கண்காட்சி மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் என்பன இடம்பெறும். அன்று மாலை 5 மணி தொடக்கம் யாகம் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து சோபன யாத்திரா இடம்பெறும். சோபன யாத்ராவில் மகாபாரதக் கதைகளின் கதாபாத்திரங்களை உள்ளடக்கிய ஆற்றுகைகளோடு, கலைநிகழ்ச்சிகள் ஏனைய கண்கவரும் கலாசார பண்பாட்டு அம்சங்கள் நடைபெறவுள்ளன.

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் கலாசார அமைச்சு, இந்து கலாசார திணைக்களம், இந்திய உயர்ஸ்தானிகராலயம், சுவாமி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT