நேபாளத்திற்கு எதிரான முக்கோண ரி20 தொடரின் முதல் போட்டியில் நமீபியாவின் ஜான் நிகொல் லொப்டி ஈட்டன் ரி20 சர்வதேச போட்டியில் அதிவேக சதம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நேபாளத்தின் கிர்டிபுரில் நேற்று (27) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபிய அணிக்காக மத்திய வரிசையில் வந்த ஈட்டன் 33 பந்துகளில் சதம் பெற்றார்.
இதன்மூலம் நேபாள வீரர் குஷால் மலாலா 34 பந்துகளில் சதம்பெற்று படைத்த சாதனையை முறியடித்தார். ஈட்டன் மொத்தமான 36 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 101 ஓட்டங்களை பெற்றார். இதன்போது அவர் பௌண்டரிகளால் மாத்திரம் 92 ஓட்டங்களை பெற்றதும் ரி20 இல் சாதனையாகும்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபிய அணி 20 ஓவர்களுக்கும் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை பெற்ற நிலையில் பதிலெடுத்தாடிய நேபாள அணி 18.5 ஓவர்களுக்கு 186 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது.