காத்தான்குடி கல்விக் கோட்டத்துக்குட்பட்ட காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் ஒரு கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கு திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை (22) நடைபெற்றது.
ஃபோரம்ஸ் நிறுவனத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த விளையாட்டரங்கை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திறந்து வைத்துள்ளதுடன், பெயர்ப்பலகையையும் திரைநீக்கம் செய்து வைத்துள்ளார்.
காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலய அதிபர் யஸீர் அரபாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர்களான எஸ்.எச்.அஸ்பர், மர்சூக் அகமது லெவ்வை, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் ரவூப் ஏ.மஜீத், கல்வி அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
இதன்போது இப்பாடசாலையில் தரம் 01க்கான புதிய மாணவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு, இனிப்புப்பண்டம் வழங்கி வரவேற்கப்பட்டனர்.
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்