Thursday, March 28, 2024
Home » காமினி ஜயவிக்கிரம பெரேராவின் இறுதிக்கிரியைகள் இன்று பன்னலயில்

காமினி ஜயவிக்கிரம பெரேராவின் இறுதிக்கிரியைகள் இன்று பன்னலயில்

by sachintha
February 20, 2024 7:16 am 0 comment

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தனது 83 ஆவது வயதில் (17) காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (20) செவ்வாய்க்கிழமை பன்னலயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டி, பன்னல பொது விளையாட்டு மைதானத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளன.

1941ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி பிறந்த காமினி ஜயவிக்கிரம பெரேரா, ஐ.தே.க. வின் முன்னாள் தவிசாளர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சரும் ஆவார். கிராம சபை உறுப்பினரான இவர், 1968 முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டார். 1977 இல் பாராளுமன்ற உறுப்பினரான இவர், 1978 இல் குருநாகல் மாவட்ட அமைச்சராக செயற்பட்டார்.

1987 இல் வடமேல் மாகாண சபை முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். 1994 இல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், 1998 இல் எம்.பி. பதவியை இராஜினாமா செய்தார். இறுதியாக 2000ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவின் நலன் விசாரிப்பதற்காக கடந்த பெப்ரவரி 11) கட்டுகம்பலையிலுள்ள அவரின் இல்லத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சென்றிருந்தார். இதன்போது முன்னாள் அமைச்சரின் நலன் பற்றி விசாரித்த ஜனாதிபதி, அவருடன் சிறிது நேரம் உரையாடலிலும் ஈடுபட்டதோடு, குடும்ப உறுப்பினர்களிடம் அவர் பற்றிய தகவல்களை கேட்டறிந்தார்.

இச்சந்திப்பில் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், காமினி ஜயவிக்ரம பெரேராவின் புதல்வரும் வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அசங்க ஜயவிக்கிரம, குருநாகல் மாவட்ட அரசியல்வாதிகள், பதில் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டோர் இணைந்திருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT