Thursday, March 28, 2024
Home » ஜோசப் வாஸ் மன்ற திறந்தவெளி சிலுவைப்பாதை

ஜோசப் வாஸ் மன்ற திறந்தவெளி சிலுவைப்பாதை

by sachintha
February 20, 2024 6:16 am 0 comment

கொழும்பு புனித ஜோசப் வாஸ் மன்றம் வருடாந்தம் நடத்தும் தவக்கால திறந்த வெளி பெரிய சிலுவைப் பாதை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கொழும்பு உயர்மறை மாவட்ட துணை ஆயர் பேரருட்திரு பி.

அன்டன் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் அன்றைய தினம் பிற்பகல் 3 .15 மணிக்கு புதுச்செட்டித் தெரு புனித வியாகுலமாதா ஆலயத்திலிருந்து சிலுவைப் பாதை பவனி ஆரம்பமாகி கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தை சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து பேராலய முன்றலில் சிறப்புத் திருப்பலி துணை ஆயர் பேரருட்திரு அன்டன் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.சிலுவைப்பாதை தியானத்தின் போது அருளுரைகளை மன்றத்தின் ஸ்தாபகர் அருட்பணி ஆனந்தன் பெர்னாண்டோ புள்ளே அடிகளாரின் தலைமையில்அருட் பணியாளர்கள் பலரும் வழங்கினர்.

சிலுவைப்பாதை காட்சிகளை படங்களில் காணலாம். (படங்கள் உதவி: வினோலிசன் பெர்னாண்டோ)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT