89
மூதூர் – திருகோணமலை படகு விபத்தின் 31 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மூதூரில் அனுஷ்டிக்கப்படுகின்றது. இப்படகு விபத்து 1993ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி பாதாள மலைக் கடற்பரப்பில் இடம்பெற்றதுடன், இதில் பயணித்த கர்ப்பிணிகள், குழந்தைகள், அரச ஊழியர்கள், படைவீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் உயிரிழந்தனர். திருகோணமலைக்கும் – மூதூருக்கும் இடையிலான 08 கிலோமீற்றர் தூரமான கடற்பரப்பில் மக்கள் படகுகள் மற்றும் சிறிய மோட்டார் படகுகள் மூலமே தினமும் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இக்கடல்வழி பயண போக்குவரத்தானது 75 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
(மூதூர் தினகரன் நிருபர்)