Home » ‘விநோதக் கனவு’ நூல் அறிமுக விழா

‘விநோதக் கனவு’ நூல் அறிமுக விழா

by damith
November 6, 2023 10:24 am 0 comment

இலங்கை நெய்னார் சமூக நல காப்பகத்தின் ஏற்பாட்டில் ‘விநோதக் கனவு’ நூலின் அறிமுக விழா எதிர்வரும் 11.11.2023 அன்று இல. 63 தெமட்டகொட வீதியில் அமைந்துள்ள வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நூல் அறிமுக விழாவினை பன்னூலாசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன் தலைமை தாங்குவதுடன் நிகழ்வின் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கலந்து சிறப்பிக்க உள்ளார். விசேட அதிதிகளாக எம்.ஜே. பாத்திமா ரினூசியா கலந்து கொள்வதுடன் நிகழ்வில் முதற் பிரதியை டாக்டர். எம்.ஏ.எம். முனீர் பெற்றுக்கொள்வார். மேலும் சிறப்புப் பிரதிகளை ஊடகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள், கவிஞர்கள், பெருமக்கள் பெற்றுக்கொள்வார்கள். கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவன் எம். எச். ரகீப் அல் ஹாதி எழுதிய ‘விநோதக் கனவு’ என்னும் சிறுகதைத் தொகுப்பு ஒக்டோபர் மாதம் 28ம் திகதி அன்று கல்லூரி மண்டபத்தில் மேலும் மூன்று மாணவர்களின் நூற்களுடன் இணைந்து வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT