மஸ்கெலியா: ஊழியர்கள் பயணித்த பஸ் விபத்து

RSM
 
மஸ்கெலியா - காட்மோர் பிரதான வீதியில், மஸ்கெலியா காட்மோர் பகுதியிலிருந்து நோர்வூட் தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி டீசைட் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12275","attributes":{"alt":"","class":"media-image","height":"447","style":"font-size: 13.008px; line-height: 20.0063px;","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
இன்று (29) வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12274","attributes":{"alt":"","class":"media-image","height":"447","style":"font-size: 13.008px; line-height: 20.0063px;","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
விபத்தில் நான்கு பேர் காயங்களுக்குள்ளாகி மஸ்கெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிஷாந்தன்)

Add new comment

Or log in with...