ஐரோப்பிய சங்க மீன்பிடி தடை நீக்கம்

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
பதிப்பு02
குறித்த தடை உத்தரவு தொடர்பில் தான் எவ்வித ஊடக அறிக்கையையும் வெளியிடவில்லை என மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம்.டி. வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.
 
ஆயினும் அவர் கையெழுத்திட்ட சிங்கள ஊடக அறிக்கை பல்வேறு ஊடகங்களுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12137","attributes":{"alt":"","class":"media-image","style":"width: 673px; height: 897px;","typeof":"foaf:Image"}}]]
 
பதிப்பு 01
 
இலங்கையிலிருந்து மீன் ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் (European Union) விதிக்கப்பட்டிருந்த தடை, எதிர்வரும் வியாழக்கிழமை (21) முதல் நீக்கப்படவுள்ளதாக மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.
 
சர்வதேச கடல் எல்லை தொடர்பான நிர்வாகம், கட்டுப்பாடு, மேற்பார்வை போன்றவை தொடர்பில் ஒழுங்கற்று செயற்படுவதாக தெரிவித்து, கடந்த அரசாங்க காலத்தில் 2014 ஒக்டோபர் மாதம் ஐரோப்பிய யூனியனால் குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
 
இதனால் ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு தடை ஏற்பட்டது.
 
இதன் காரணமாக கடந்த வருடத்தின் (2015) முதல் 6 மாதம் வரை, சுமார் ரூபா 975 கோடி அந்நியச் செலாவணியை இலங்கை இழந்தது.
 
குறித்த தடை உத்தரவை நீக்குவது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் பின்பற்றிய நடவடிக்கை திருப்தியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தே குறித்த தடை உத்தரவை, ஐரோப்பிய ஒன்றியம் நீக்க முன்வந்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பில் ஐரோப்பிய யூனியன், அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Add new comment

Or log in with...