40 அடி பள்ளத்தில் வீழ்ந்து கார் விபத்து

யுவதி பலி இருவர் காயம்

ஹபுத்தளை பகுதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 22 வயதுடைய யுவதியொருவர் பலியானதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று அதிகாலை பண்டாரவளை – ஹபுத்தளை பிரதான வீதியில் கார் ஒன்று  பாதையை விட்டு விலகி 40 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. இந்தக் காரில் பயணித்த பெண்ணொருவர் சம்பவத்தில் பலியானதுடன் அவரது தாயும் சகோதரனுமே படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தில் பலியானவர் 22 வயதுடைய சமுர்திகா ஈசானி என்ற யுவதியென்றும் அவரது சகோதரனும் தாயும் படுகாயங்களுடன் பண்டாரவளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பண்டாரவளை பொலிசார் தெரிவித்தனர். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...