இளைஞர் நகருக்கு பிரதமர் விஜயம்

சிகிரியா விமானப்படை முகாமில் இடம்பெற்று வரும் 'யொவுன்புர' எனும் இளைஞர் நகருக்கு இன்றைய தினம் (01) பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரில் சென்று பார்வையிட்டார்.
 
எதிர்காலம் உதயமானது எனும் கருப்பொருளின் அடிப்படையில், நேற்று முன்தினம் (30) ஆரம்பமான இந்நிகழ்வில் சுமார் 5,000 இளைஞர், யுவதிகள் பங்கேற்றுள்ளனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"11740","attributes":{"alt":"","class":"media-image","height":"449","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
கல்வி, விளையாட்டு, ஊடகம், போக்குவரத்து, உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்நிகழ்வில் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் கூடாரமும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...