Thursday, February 25, 2016 - 2:45pm
பதிப்பு-02
லக்ஷபான நீர் மின்னிலையத்திலிருந்து பொல்பிட்டிய உப மின்நிலையத்தினூடாக கொழும்புக்கு மின்வழங்கும் 33,000 வோல்ட் மின் தொகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இம்மின்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின் கம்பிகளில் மின்னல் தாக்கியமையே குறித்த மின்தடைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் இன்னும் ஒரு மணித்தியாலத்தினுள் நிலைமை சுமூகமடையும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பதிப்பு-01
நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபை, சுமார் 3 தொடக்கம் 4 மணித்தியாலங்கள் செல்லும் எனவும் அறிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு மற்றும் புறநகர் பகுதியில் தற்போது இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Add new comment