தனக்குத்தானே தீ மூட்டிய நோயாளி

கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்ட நோயாளி ஒருவர் தீக் காயங்களுடன் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
குறித்த சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளதோடு, சம்பவத்தில் தீ மூட்டிக்கொண்ட 31 வயதான நபர் இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார் என பொலிஸார் தெரிவித்தனர்.
 
நோய்வாய்ப்பட்ட நிலையில், கராபிட்டிய வைத்தியசாலையின் 52 ஆவது வாட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு, அங்கிருந்து ஓடிச் சென்று, காலி கால் பந்து மைதானத்தில் வைத்து தீ மூட்டிக் கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Add new comment

Or log in with...