ஜனாதிபதி ஜேர்மன், ஆஸ்திரியாவுக்கு பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டுஜேர்மன், ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்குப் நேற்று பயணமானார்.இதன்போது மூன்று நாள் ஜேர்மனியிலும், இரண்டு நாள் ஆஸ்திரியாவிலும் முக்கிய சந்திப்புகள் , கலந்துரையாடல்களில் அவர் ஈடுபடவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான கியூ.ஆர். 655 இலக்க விமானத்தில் நேற்றுக்காலை ஜனாதிபதி இங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.

ஜேர்மன் அதிபர் எஞ்சலா மேர்கலின் அழைப்பின் பேரில் அவர் ஜேர்மன் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதன்போது இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கள் மேம்படுத்தப்படவுள்ளன.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இவ்விஜயத்தின் மூலம் இலங்கைக்கு பல்வேறு பொருளாதார மற்றும் அபிவிருத்தி அனுகூலங்கள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜேர்மனிக்கு வருகை தரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை வரவேற்பதற்காக விசேட வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜேர்மன் அதிபர் எஞ்சலா மேர்கல் தலைமையில் 17ஆம் திகதி இவ் வைபவம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதிக்காக ஜேர்மனில் விசேட அணிவகுப்பு மரியாதையும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

ஜேர்மன் பாராளுமன்றத்திற்கு செல்லவுள்ள ஜனாதிபதி அங்கு முக்கிய பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

இவ்விஜயத்தின்போது ஜேர்மன் வெளிநாட்டமைச்சர் மற்றும் ஜேர்மன் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ஆகியோரை சந்தித்து இரண்டு நாடுகளினதும் பொருளாதார ஒத்துழைப்பினை அபிவிருத்தி செய்தல் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்களில் ஜனாதிபதி ஈடுபடவுள்ளார்.

இவ்விஜயத்தை முடித்தி பின் 19ஆம் திகதி ஜனாதிபதி ஒஸ்ரியா நோக்கி பயணமாகவுள்ளார். ஆஸ்திரியாவுக்கான தனது இரண்டுநாள் விஜயத்தின்போது ஒஸ்ரிய ஜனாதிபதி ஹெயின்ஸ் பிஸ்கர் உள்ளிட்ட அந்நாட்டு முக்கிய பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் அவர் ஆஸ்திரியா வர்த்தக சங்கத்தினரையும் சந்திக்கவுள்ளார். 

 


Add new comment

Or log in with...