Saturday, February 13, 2016 - 9:30am
இன்றும் (13) நாளையும் (14) களனி வழி பாதையில் ரயில் இயங்காது என இலங்கை ரயில் நிலையத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு, பேஸ்லைன் ரயில் கடவைக்கு அருகில் இடம்பெறும் பாதை திருத்தப் பணிகள் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அவிஸ்ஸாவளையிலிருந்து கொழும்பு நோக்கி வரும் ரயில், பேஸ்லைன் வீதி ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்நிலையத்திலிருந்தே அவிஸ்ஸாவளைக்கான சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், களனி வழி பாதையினூடாக தினமும் பயணிக்கும் 08 ரயில் சேவைகளில் 03 சேவைகளே இன்றும் நாளையும் இடம்பெறும் எனவும் ரயில் நிலையத் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment