பன்குளம் வாய்க்காலில் வீழ்ந்து கிடந்த யானை உயிரிழப்பு!

பன்குளம் வாய்க்காலில் விழுந்து கிடந்த யானை உயிரிழப்பு!-Elephant Dead-Pankulam Trincomalee

திருகோணமலை பன்குளம் பகுதியில் வாய்க்காலில் வீழ்ந்து கிடந்த யானை இன்று (20) மாலை உயிரிழந்துள்ளது.

கடந்த 07ஆம் திகதி முதல், பன்குளம் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள தனியார் காணியொன்றின் வாய்க்காலில் வீழ்ந்த யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

பன்குளம் வாய்க்காலில் விழுந்து கிடந்த யானை உயிரிழப்பு!-Elephant Dead-Pankulam Trincomalee

யானை உயிரிழந்தமை தொடர்பில் நாளைய தினம் (21) மரண பரிசோதனை உள்ளிட்ட விசேட வைத்திய பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஆனாலும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் யானையை காப்பாற்றுவதற்காக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் யானை உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...