Friday, February 5, 2016 - 1:00pm
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (05) இலங்கை வந்தடைந்தார்.
இன்று பி.ப. 12.30 மணிக்கு விசேட விமானம் ஒன்றின் மூலம் இலங்கை வந்தடைந்த அவரை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்றார்.
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10167","attributes":{"alt":"","class":"media-image","height":"379","typeof":"foaf:Image","width":"673"}}]]
இன்று பி.ப. 2.00 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர், இலங்கையின் ஜனாதிபதி, உள்ளிட்ட இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment