Thursday, January 28, 2016 - 2:45pm
ஞானசார தேரர் சார்பாக இன்று (28) சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பிணை வழங்குவதற்கு சரியான காரணம் முன்வைக்கப்படாததால், தான் குறித்த மனுவை நிராகரிப்பதாகத் தெரிவித்த ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க, "எனது தலையில் துப்பாக்கியை வைத்தாலும், நான் வழங்கிய இத்தீர்ப்பை மாற்றப்போவதில்லை" எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
"என் மீது பிழை காணப்படுமாயின், உயர் அதிகாரிகளுக்கு அறிவியுங்கள். இவ்வழக்கு விசாரணையை நான் விசாரிக்கக் கூடாது என நான் நினைக்கிறேன். நான் இது தொடர்பில் சட்ட மாஅதிபரின் ஆலோசனையை கோரியுள்ளேன். அடுத்த விசாரணையின்போது, அவரது ஆலோசனை கிடைக்கும் என நான் நினைக்கிறேன்" என அவர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஞானசாரவினால் நீதிமன்றம் அவமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும், ஊடகவியலாளர் எக்னலிகொட வழக்கு விசாரணை நடைபெற்ற சந்தர்ப்பத்தில், குறித்த நீதிபதியே கடமையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment