வழிபாட்டுக்காக சென்ற 8 வயது சிறுவன் பலி

கோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி ஒன்றால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வந்த 8 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று (16) காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9540","attributes":{"alt":"","class":"media-image","height":"366","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
ஹட்டன் போடைஸ் பிரதான வீதியின் டிக்கோயா பட்டல்கலை பகுதியில் நேற்று (15) இரவு 7.30 மணியளவில்  பட்டல்கலை தோட்ட பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு வழிபாட்டுக்காகச் சென்ற 8 வயது சிறுவனும் அவரின் சகோதரனும், வேக கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டியினால் மோதப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9542","attributes":{"alt":"","class":"media-image","height":"366","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
இதில் படுங்காயமடைந்த சகோதரர்கள் அயலவர்களினால் டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களின் நிலை மோசமாக இருந்ததை அடுத்து, அங்கிருந்து கண்டி வைத்தியசாலைக்கு உடனடி மாற்றம் செய்யப்பட்டனர். 
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"9541","attributes":{"alt":"","class":"media-image","height":"366","style":"font-size: 13.008px; line-height: 20.0063px;","typeof":"foaf:Image","width":"650"}}]]
 
அங்கு சிகிச்சை பலனின்றிய நிலையில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். எனினும் அவருடைய சகோதரர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.
 
இவ்விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டியின் சாரதியை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
 
(க.கிஷாந்தன்)

Add new comment

Or log in with...